
விக்கிரவாண்டியில் ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக தலைமையிலான மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலாவுகிறது. இந்நிலையில் விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதன் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.