செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இந்நிலையில், “மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கு முழுக்க முழுக்க நாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

இசை நிகழ்ச்சியை நடத்திக்கொடுப்பது மட்டுமே அவரின் வேலை, அவர் அதை சிறப்பாகவே செய்தார். அதனால், தயவு செய்து அவரை தாக்கிப் பதிவிட வேண்டாம் “டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை காண முடியாத அனைவருக்கும் நிச்சயம் பணம் திருப்பி அளிக்கப்படும்” என ACTC நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு கோரியுள்ளார்.