தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் தேவைக்கேற்ப சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலில் காரணமாக சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பல இடங்களில் ஆவின் பால் கிடைப்பதில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.