கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்று சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய பிரச்சனையை புறந்தள்ளிவிட்டு அரசே சிறார்களை ஊழியர்களாக பயன்படுத்தலாமா என்ற கேள்வி பூதாகரமானது. இது தொடர்பாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வீடியோ போலி என்று அமைச்சர் மனோ தங்கராஜ் மறுத்திருக்கிறார்.

இந்நிலையில் அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் 50 குழந்தை தொழிலாளர்கள் பணிக்கமர்த்தியதும், அவர்களுக்கு ஊதியம் வழங்காததும் அதிர்ச்சியளிக்கிறது என TTV தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்த ட்வீட்டில், ‘குழந்தை தொழிலாளர்களை பணிக்கமர்த்திய ஆவினுக்கு அபராதம் விதிப்பதுடன், இதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், சிறார்களுக்கு உரிய ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.