புது டெல்லி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேஷோப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு குழந்தை விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. பின்னர், அது குழந்தை அல்ல, இளைஞர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகள் தற்போது தோல்வியில் முடிந்துள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது தெரியவில்லை.