தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆளுநர் செயல்பாடு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.

அதில்,பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதா பற்றி பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஏற்புடையதல்ல. பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும் குடியரசு தலைவரும் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.