எம்ஜிஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி. பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்டபோது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985இல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதன் பின் 24 வயதில் எம்எல்ஏவாகி இளம் அரசியல்வாதி எனும் பெருமையை பெற்றுள்ளார். இதனையடுத்து எம்பி பதவி, ஜெயலலிதாவின் விசுவாசி, ஓபிஎஸ் – இபிஎஸ் இரட்டை தலைமையின் கீழ் முக்கிய நிர்வாகி என அரசியல் செய்து வந்துள்ளார்.

ஒரு காலகட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசிய காரணத்தினால் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ்- இபிஎஸ் என இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவியை நேற்று சந்தித்து ஆளுங்கட்சி மீது சில புகார்களை  முன் வைத்துள்ளார். அதே சமயம் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பால் அதிமுக எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லவில்லை. மேலும் உண்மையான தொண்டர்கள் எம் ஜி ஆர் பக்கம்தான் நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆளுநரால் இனி தலை இனி நிச்சயம் அதிமுக தலை நிமிர்ந்து நிற்கும்” என பதிவிட்டுள்ளார். அதிமுக தலைநிமிர்ந்து நிற்பதற்கு ஆளுநர் எப்படி உதவி செய்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே அதிமுகவை ஒன்றிணைப்பதில் பாஜக தலைமை தொடங்க ஆர்வம் காட்டி வருகிறது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி உடன் கைகோர்த்ததே பிரதமர் மோடி சொல்லித்தான் என ஓ.பன்னீர் செல்வமே கூறியுள்ளார். அதன் பின் எடப்பாடி உடன் மோதல் போக்கு ஏற்படும்போதெல்லாம் டெல்லி சென்று முறையிடுவதை ஓபிஎஸ் வழக்கமாக வைத்திருந்தார். மேலும் டெல்லியின் அதிகார மையம் தனக்கு ஆதரவாக இருப்பதை சுட்டிக்காட்டி இபிஎஸ் இடம் சில விஷயங்களை சாதித்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார். இருப்பினும் கடைசிவரை இரண்டாவது அரசியல்வாதியாக தான் இருக்க முடிந்தது.

ஏனென்றால் அதிமுகவின் தனக்கான செல்வாக்கை படிப்படியாக உயர்த்திக் கொண்டு டெல்லியின் ஆதரவுடன் ஓபிஎஸ்சை  ஓரங்கட்டியுள்ளார். கடந்து வருடம் ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி தரப்பு  அதிரடி காட்டியது. அதன் பின் நீதிமன்ற வழக்கு தொடர் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தான் டெல்லிக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கும் விதமாக ஆளுநர் ஆர்.என் ரவியை கே. பழனிசாமி சந்தித்து பேசி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஆனால் இவரது குரல் டெல்லியில் எடுபடாது எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் கே. பழனிசாமி யார் பக்கமும்  நிற்க விரும்பாதவர். அவர் ஒரு குழப்பவாதி சீனியர் என்ற முறையில் தனக்கான மரியாதை இல்லை என்பதை அடிக்கடி வெளிகாட்டி கொண்டே இருக்கிறார்.

இருப்பினும் மாற்றுக் கட்சிகளின் அதிருப்தி  தலைவர்களை தன்வசம் ஈர்க்க  அல்லது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாஜக என்றைக்குமே விரும்பும். அந்த வகையில் கேசி பழனிசாமியை அரவணைத்து செல்வதாக பாஜக தலைமை முன் வரலாம். அதேபோல் இவரை வைத்தும் அதிமுகவின் அரசியல் கணக்குகளை மாற்ற டெல்லி திட்டம் இடலாம். அதிமுக மாஜிக்கள் மீதுள்ள ஊழல் புகார்கள் பற்றி நடவடிக்கை எடுக்காமல் லாபி செய்யலாம். இதற்கு கே.சி பழனிசாமிக்கு சில அசைமண்டுகள் அளிக்கப்படுமா? இல்லை பாஜக வேறு வழியில் காய் நகர்த்துமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறி உள்ளது.