ஆளுநர் ரவிக்கு திமுக அரசு புது செக் வைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான துறை வாரியான விவாதமானது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மாலை சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன் ஆளுநருக்கு வழங்கப்படும் நிதி குறித்து பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டிஸ்க்ரினரி பண்ட் என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக குறைக்கப்படும். அதேபோல், பல்வேறு இனங்களில் அரசு ஒதுக்கிய நிதியை ஆளுநர் மாளிகை செலவிட்ட விதம் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.