சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பூலாம்பட்டி காவேரி ஆறு இருக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் மீன்களை பிடிப்பதற்காக மீனவர் பெருமாள் நாட்டு வெடிகளை வீசி உள்ளார். இதன் காரணமாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மோகன்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடி வீசி மீன்பிடித்த மீனவர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.