சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் ஊக்கத் தொகையை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தாம்பரத்தில் 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரித்தொகையில் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும்  இதில் ஒரு வரிவிதிப்பு எண்ணிற்கு அதிகபட்சமாக ₹5000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.