தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே வீடு, பள்ளி, தேர்வு என சிக்கி இருந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நாளை முதல் கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் பாதுகாப்புடன் தங்கள் கோடை விடுமுறையை செலவிடும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும் மே 3 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.