தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களை கட்டியது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகின்றனர். நேற்றும், இன்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.