சென்னையில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்துகள் சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்று இரக்க அனுமதி வழங்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகள் இறங்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றுச்செல்ல அனுமதி அளித்தால் கிளாம்பாக்கத்திற்கு முன்பே பேருந்து நிரம்பிவிடும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.