விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வது தமிழகத்தில் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முறை நடவடிக்கை எடுத்தும் இன்னும் பல இடங்களில் கட்டணம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என தனியார் பேருந்துகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.