உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தின் திரிவேணி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தளத்திற்கு சென்று விட்டு இன்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தியா – நேபாள எல்லையில் நேபாளத்தின் துஹிபெரி என்னும் பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்மீக சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து… 70 பேர் படுகாயம்… வெளியான தகவல்…!!!!!
Related Posts
அடேங்கப்பா…! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.7 லட்சம்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…??
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் விஹார் என்ற விவசாயி தனது பண்ணையில் பெரும் விலைமதிப்புள்ள, அரிய வகை மா மரங்களை வளர்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் மியாசாகி வகை மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இந்த மாம்பழத்தின் விலை கிலோ…
Read moreபூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!
நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…
Read more