உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தின் திரிவேணி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தளத்திற்கு சென்று விட்டு இன்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தியா – நேபாள எல்லையில் நேபாளத்தின் துஹிபெரி என்னும் பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்மீக சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து… 70 பேர் படுகாயம்… வெளியான தகவல்…!!!!!
Related Posts
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
கிழக்கு ஐரோப்பாவில் மால்டோவா என்ற நாடு அமைந்துள்ளது. இங்குள்ள உஸ்டியா கிராமத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது…
Read moreஅடக்கடவுளே…! திடீரென விமானத்திலிருந்து கீழே விழுந்த ஊழயர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
இந்தோனேஷியா தலைநகர் ஜகத்தாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். அவர் ஆய்வை முடித்துவிட்டு கீழே இறங்க முயன்ற போது அவர் நிற்பதை கவனிக்காமல் ஊழியர்கள்…
Read more