சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மரணமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான சுமார் ஒரு மாத காலகட்டத்தில் கொரோனா மரணங்கள் உலக அளவில் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2022 டிசம்பர் 19 முதல் 2023 ஜனவரி 15 வரையிலான ஒரு மாத காலகட்டத்தில் சுமார் 1.3 கோடி பாதிப்புகளும் சுமார் 53,000 புதிய மரணங்களும் கொரோனாவால் ஏற்பட்டுள்ளது. இது முந்தைய 28 நாட்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஏழு சதவீத சரிவும் (பாதிப்பு), 20% அதிகரிப்பும் (மரணம்) ஆகும் என கூறியுள்ளது.