ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதாகி சிறையில் உள்ள நிலையில், அவரது மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.  சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். சந்திரபாபு நாயுடு தவறு செய்ய மாட்டார் என்றும், தன்னலமற்ற பொது சேவை அவரை காப்பாற்றும் எனவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.