ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை என்றால் ரேஷன் கார்டில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் நம்பரும் நேரடியாக சோதிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.