இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து ஆதார் எண் வைத்திருப்பவர்களும் தங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உதவி செய்வதற்காக பதிவு செய்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய அறிவிப்பில் ஆதார் அட்டை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளும் காலக்கெடு ஜூன் 14ஆம் தேதி வரை இருந்த நிலையில் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது அறிவிப்பின்படி மக்கள் தங்களுடைய ஆதார் ஆவணங்களை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச சேவை மை ஆதார் ஹோட்டலில் மட்டுமே கிடைக்கும் எனவும் நீங்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் அட்டையை புதுப்பித்தால் 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு புதுப்பிக்க முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மை ஆதார் என்ற பக்கத்தை தேர்வு செய்து உங்களது ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு விருப்பப்பட்ட தகவலை அப்டேட் செய்த பிறகு சேவ் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிறகு URN என்ற எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட்ட விவரங்களின் புதுப்பிப்பு நிலையை நீங்கள் கண்காணிக்கலாம்.