சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறியவர் வாணி போஜன். தற்போது இவர் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படமாக திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கிறது. இவர் மாடலிங் துறையில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக மாடலிங் துறையில் நுழைந்து பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ஓ மை கடவுலே என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் அசோக்செல்வன் இவருக்கு கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது வாணி போஜனுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன் பிறகு கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த செங்கலம் என்ற வெப்சரிஸ் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இவர் நேற்று அளித்த பேட்டியில், ஆண்கள் மீது கோபம் இருக்கிறது. எல்லோரின் மீதும் கிடையாது. மணிப்பூரில் நடந்த பாலியல் பிரச்சனையில் ஈடுபட்டது ஆண்கள்தானே. இப்படிப்பட்ட ஆண்கள் மீது எனக்கு கோபம் உண்டு. நீ மரியாதை தந்தால் நானும் மரியாதை தருவேன் அவ்வளவுதான். ஆண்கள், பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பதே கிடையாது, அடிதான்” என நடிகை வாணி போஜன் கூறியுள்ளார்.