உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன்னை ஆணாக மாற அனுமதிக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் 2019 ஆம் வருடம் காவல் துறையில் சேர்ந்தார், தற்போது உள்ளூர் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருகிறார். குழந்தை பருவத்திலிருந்தே பாலின டிஸ்ஃபோரியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் பாலின மறுசீரமைப்புக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், அந்த காவலருக்கு கவுன்சிலிங் நடத்த டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி அளிக்கக் கோரி கடிதம் அனுப்பியிருக்கிறார்.