ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகில் தல்லாரேவு புறவழிச் சாலையில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, முதற்கட்ட விசாரணையில் அதிவேகத்தில் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.