கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதியும், சபரீசனும் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக பிடிஆர் பேசுவது போன்ற ஆடியோ பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பிரச்சினையானது பெரும் பூதாகரமாக வெடிக்க அண்ணாமலையும், PTR-ம் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவில் பாதி பிடிஆர் பேசியதே இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் பலகோடி சொத்து சேர்த்துவிட்டதாக பிடிஆர் பேசுவது போன்று வெளியானது அந்த ஆடியோ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட ஃபேக் ஆடியோ அது என்று விளக்கம் அளித்தார் மா.சுப்ரமணியன்.