அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கொள்கை மாற்றத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர் விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என உறுதியளித்துள்ளார்”.