மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டிசைனர், பிரிண்டெட் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. பெண்கள் குர்தா துப்பட்டா, சல்வார், சுடிதார் அல்லது சேலை அணிய வேண்டும், ஆண்கள் சட்டை மற்றும் கால் சட்டைகளை அணிந்து கொண்டே உள்ளே நுழைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.