தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் பெற்று வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 19ஆம் தேதி விழுப்புரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் 150கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் பட்டம் பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் எனவும் தற்போது புதிய வேலையை தேடி வருபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.