திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜய நாராயணம் அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துகிருஷ்ணன், முத்துதுரை ஆகிய சகோதரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துகிருஷ்ணனுக்கும் முருகன், முத்துதுரை ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று முத்துகிருஷ்ணனின் மனைவி ராஜேஸ்வரியிடம் முருகன், முத்துதுரை, முருகனின் மனைவி ஜெயலட்சுமி, மகள் தினேஷ், மகள் சுபி, காசி, செல்லமுத்து ஆகிய ஏழு பேரும் இணைந்து தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி காம்பால் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ராஜேஸ்வரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ஏழு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.