அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், அடிப்படைத் தொண்டனாக அரசியல் வாழ்வை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுகவின் பொதுச் செயலாளராக உறுதி செய்யப்பட்டிருக்கிறார். இது அவரது வலுவான ஆளுமைக்கு உதாரணமாக இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் இந்த வாய்ப்பு மீண்டும் பாஜகவை சுமப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆனால் அனைத்தும் பாழே என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தொல். திருமாவளவன் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்ததை தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள  பதிவில், அவர் பாஜகவை கழட்டிவிட்டா நீங்க திமுகவை கழட்டி விட்டுட்டு வாங்க என்று பதிவிட்டுள்ளார். மேலும் திமுகவை தொடர்ந்து எதிர்த்து வரும் சவுக்கு சங்கர் பாஜகவை வெளிப்படையாக திமுக எதிர்கிறது என்றும் ஆனால் அவர்களிடம் மறைமுக டீலிங் இருக்கிறது என்றும் கூறி வருகிறது.