தமிழகத்தில் அரிசியின் விலை மூட்டைக்கு 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் விளைவாக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது அரிசி விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர். ரேஷன் கடைகளிலும் அரிசி தட்டுப்பாடு என தகவல் பரவிய நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழக்கம் போல அரிசி விநியோகிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.