எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதி தடையால் அரிசியின் விலை உலக அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அரிசி வர்த்தகர்கள் இதன் மூலம் அதிக லாபம் பெறுவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் அரிசி வாங்க கூட்டம் அலைமோதியுள்ளது. சூப்பர் மார்க்கெட் ஒன்றின் வாசலில் மக்கள் அரிசி வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.