வீட்டில் நாம் சேமித்து வைத்த அரிசி சில சமயங்களில் புழுக்களால் பாதிக்கப்படுகிறது.  இந்த புழுக்களை விரட்டியடிப்பதே பெரும் வேலையாகி விடும். அரிசி வைக்கும் பாத்திரங்களில் ஈரப்பதம் இருப்பதும் பூச்சிகள் விழுவதற்கு காரணமாகிறது. எனவே அரிசி சேமிக்கும் பாத்திரத்தில்  ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பிரியாணி இலை மற்றும் கிராம்பு போன்ற கடுமையான மணம் கொண்ட பொருட்களை பாத்திரங்களில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. காய்ந்த வேம்பு, கிராம்பு, கற்பூரம் ஆகியவற்றை துணியில் கட்டி வைத்தாலும் பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.