நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு மாலாடாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மேற்கு வங்காளத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

இங்கு லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு அரசு வேலைகளும் நடக்காது. இதிலிருந்து விவசாயிகள் கூட தப்பவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தோடு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் விளையாடுகிறார்கள். மேலும் அக்கட்சியால் 26,000 குடும்பங்கள் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.