தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஏராளமான வசதிகளை வழங்குகிறது. இருந்தாலும் சரியான நேரத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காமல் ஊழியர்கள் அனைவரும் அவதிப்படுகின்றனர். அதேசமயம் ஆசிரியர்களுக்கு வருவதாக வாக்குறுதி வழங்கியதை அரசு நிறைவேற்றாமல் இருப்பதால் அடிக்கடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு சார்பில் மிக முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் அதாவது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.