ஒடிசா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20000 இளநிலை ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக பள்ளிக்கல்வி திட்ட ஆணையம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிபிடி தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் குறித்து அனைத்து விவரங்களும் osepa.odisha.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிபிடி தேர்வுக்கான பாடத்திட்டமும் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.