தனியறையில் ஆபாசப் படங்களை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும், ஆனால் அதுபோன்ற படங்களை பகிர்தல் மற்றும் பொது இடத்தில் ஒளிபரப்புதல் சட்டப்படி குற்றம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றம் என்று சொல்வது தனிப்பட்ட உரிமைகளில் தலையிடும் செயல் என்றும் நீதிபதி விமர்சித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு சாலையோரத்தில் செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் ரத்து செய்துள்ளார்.