தமிழகத்தில் தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணம் கொண்டும் 1,2,3ஆம் வகுப்புகளுடன் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது.

அதாவது ஈராசிரியர் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு களுக்கு ஒரு ஆசிரியரும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும். அதேசமயம் மூன்று முதல் நான்கு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளை பிரித்து பாடங்களை நடத்த வேண்டும். போதிய ஆசிரியர்கள் இருந்தால் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்த வேண்டும் எனவும் இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.