தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது.

அதில் கோட்டை விட்டுவிட்டால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். யாரும் முதலீடு செய்ய வர மாட்டார்கள் என கூறியுள்ளார். தூத்துக்குடியில் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த விஏஓ அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ள நிலையில் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் வானதி சீனிவாசன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.