இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலை படியை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார நெருக்கடி காரணமாக அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மீண்டும் அகவிலை படியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 34 சதவீதமாக வழங்கப்பட்ட அகவிலைப்படி மேலும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து 2022 ஜூலை மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு எப்போது என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த வருட நிலவரத்தை வைத்து பார்க்கும் போது இனி வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி அகவிலைப்படி உயர்வு 5% வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.