தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் டிஜிட்டல் வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால் கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையும் குறைகின்றது. எனவே ஒவ்வொரு பள்ளியிலும் டிஜிட்டல் பள்ளி பாடம் நடத்தும் வகையில் பிராட்பேண்ட் இணையதள இணைப்பை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.