திமுகவில் இருந்து வெளியே வந்த பிறகு எம்ஜிஆரே கட்சி தொடங்க பயந்தார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய சீமான், பிரிந்து வந்த பின்னரும் மீண்டும் திமுக உடனே இணைந்து விடலாம் என்றெல்லாம் அவர் முயற்சி செய்தார். கருணாநிதி மட்டுமே இருந்ததால் வேறு வழி இன்றி எதிர்ப்பதை தொடர்ந்தார். அதன் பிறகு மக்கள் செல்வாக்கில் ஆட்சியைப் பிடித்தார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.