அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளார். தமிழக பாஜகவில் மீண்டும் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் தன்னுடைய twitter பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் என்னை அரவணைத்து பீனிக்ஸ் பறவையாக மாற்றிய அண்ணாமலைக்கு நன்றி. மேலும் கடமை மற்றும் கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக போர் தொடுப்பேன் என்றும் அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் செயல்படுவேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.