செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகை வாணி போஜன் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது செங்கலம் என்ற வெப் தொடரில் நீங்கள் அரசியல்வாதியாக நடித்திருந்தீர்கள். அப்போது கூட அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருந்தீர்கள். தற்போதும் அந்த மனநிலையில் இருக்கிறீர்களா என கேட்ட கேள்விக்கு, அரசியலுக்கு அவங்க வரணும் இவங்க வரணும்னு இல்ல.

யாரு வேணாலும் வரலாம் என கூறியுள்ளார். மேலும் செங்கலம் பண்ணும்போது அந்த ஆசை இருந்தது, இப்பவும் அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் அவர் என்ன செய்வார் என்பதையும் பார்க்கலாம் என கூறியுள்ளார்.