
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய நபர் தோலம்பாளையம் ஜெ.ஜெ நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அந்த தகவலின் படி பரமேஸ்வரி குறிப்பிட்ட அந்த பகுதிக்கு சென்று வீட்டில் சோதனை நடத்தி உள்ளார். அப்போது ஒரு வீட்டில் இருந்த இரண்டு பெண்களும் இணைந்து சிறுவர்களை தாக்கி கொடுமைப்படுத்தியது உறுதியானது. மேலும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது . பெரியநாயக்கன்பாளயத்தில் மஞ்சு(25) என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ரமேஷ்(30) என்பவர் உடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு ராகுல், ரோஷன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு தனது கணவரை பிரிந்து மகன்களுடன் வசித்து வந்தார். அவர் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற போது 28 வயதான பிரியங்கா என்ற திரு நம்பியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த உறவிற்கு சிறுவர்கள் இடையூறாக இருந்துள்ளனர்.
கடந்த 9ஆம் தேதி மஞ்சுவும் பிரியங்காவும் இணைந்து தகாத வார்த்தைகளால் சிறுவர்களை திட்டி தாக்கியுள்ளனர். மேலும் கத்தியை காட்டி கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். சிறுவர்கள் அடிக்காதீங்க எங்களுக்கு வலிக்கிறது என கெஞ்சியுள்ளனர். ஆனாலும் இருவரும் சேர்ந்து தாக்கியதால் சிறுவர்களின் முகம், தாடை, கழுத்து உள்ளிட்ட உடல் பாகங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இது குறித்த புகாரின் பேரில் பிரியங்கா மற்றும் மஞ்சுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.