ஈரோடு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மகா சிவராத்திரி தினத்தன்று சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை உள்ளிட்ட பொருள்கள் ஏலம் விடப்பட்டன. அதில் ஒரு எலுமிச்சை பழத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த பக்தர் அதனை பூஜை செய்து வழிபட்டால் செல்வம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என நம்புவதாக கூறினார்.