அம்பானி வீட்டின் திருமண நிகழ்ச்சி குஜராத் ஜாம்நகரில் நடைபெறுவதால், அங்குள்ள விமான நிலையம் ’10 நாட்களுக்கு’ சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் சுகாதார அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை விமான நிலையத்தில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன.

வழக்கமாக ஜாம்நகர் விமான நிலையத்தில் தினசரி 6 விமானங்கள் மட்டும் தரையிறங்கி வந்த நிலையில் நேற்று மட்டும் 140 விமானங்கள் தரையிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.