புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். உடல்நிலையை காரணம் காட்டி, ஜாமின் கோரிய அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.