தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகியதால் வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும். மேலும் இன்றே விசாரணை மேற்கொள்வதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் முயற்சிகள் எடுக்கப்படுகிறது. நடைமுறையை பின்பற்றி புது அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.