அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில் கடிதம் எழுதி இருந்ததாகவும் பொன்முடி கூறியுள்ளார். வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அமைச்சரை நீக்க முடியாது என முதல்வர் பதில் சொல்லிருந்தார் என பொன்முடி கூறினார். இரண்டு துறைகளை மாற்றி பரிந்துரைத்த தமிழக அரசின் கடிதத்தை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார் என்றும் அவர் கூறினார்.