தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை அமைச்சர் இதனை நிரூபிக்க தயாரா? அமைச்சரின் கூற்றில் சிறிதும் உண்மை கிடையாது. சென்னையின் மின் தேவையை நிறைவேற்றும் அளவுக்கு கூட மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையவில்லை என்பதுதான் உண்மை என தெரிவித்துள்ளார்.